Tamilnadu
சிறுமியைக் கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்.. உரிமையாளரை எச்சரித்த போலிஸ் : நடந்தது என்ன?
சென்னை நொயம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவன். இவரது மகள் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுமி தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியே வந்த வளர்ப்பு நாய் ஒன்று திடீரென சிறுமியைக் கடித்து இழுத்துச் சென்றது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாயிடம் இருந்து சிறுமியை மீட்டு முயற்சி செய்தனர். இதற்குள் சிறுமியின் கை, கால், முதுகு ஆகிய 16 இடத்தில் கடித்து குதறியது. பின்னர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் சேர்த்தனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது புகார் அளித்தனர். பின்னர் நாயின் உரிமையாளர் விஜயலட்சுமியைக் காவல்நிலையம் அழைத்து போலிஸார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!