Tamilnadu
இளம் பெண் கத்தியால் குத்தி கொலை.. சித்தப்பாவை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம், கற்குழாய் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவரது சகோதரி சரஸ்வதி. இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் இருவரது குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது லோகநாயகி குடும்பத்தார், சரஸ்வதி குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சரஸ்வதியின் கணவர் பாலச்சந்தர், லோகநாயகியின் மகள் சிவரஞ்சனியை குத்தியால் 7 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லோகநாயகி மற்றும் அவரது குடும்பத்தினர் சிவரஞ்சனியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர். சிவரஞ்சனியை குத்தி கொலை செய்த பாலசந்தர் என்பவர் அவரின் சொந்த சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!