Tamilnadu
“திமிர் பிடித்தவர்; விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்? என்கிறார்”: மோடி மீது மேகாலயா ஆளுநர் குற்றச்சாட்டு!
மேகலாய ஆளுநர் ஆளுநர் சத்ய பால் மாலிக் சமீபகாலங்களில் மோடி அரசு செய்யும் குற்றங்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக கண்டித்து வருகிறார். மேலும் ஆளுநரின் அதிகாரங்களில் ஒன்றிய அரசின் தலையீடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் சத்ய பால் மாலிக் அவரிடம் சில கோரிக்கைகளை வைத்ததாகவும், அதற்கு பிரதமர் மோடி முறையாக பதில் அளிக்கவில்லை என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஹரியானாவில் நடந்த விழாவில் பேசிய, “நான் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவர் மிகவும் திமிர் பிடித்தவர். அவரிடம் நம்முடைய விவசாயிகள் 500 பேர் பலியாகியுள்ளதாக கூறினேன்.
அதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்? எனக் கேட்கிறார். அதற்கு நான் நீங்கள்தான் நாட்டின் பிரதமர் எனக் கூறினேன். இதனால் வாக்குவாதம் ஆகும் சூழல் ஏற்படவே, பின்னர் அவரை என்னை அமித்ஷாவை சந்திக்குமாறு கூறிவிட்டார். அதனால் நான் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது,
அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள். தொடர்ந்து என்னை சந்தியுங்கள்'' என அமித்ஷா கூறியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஆளுநர் சத்தியபால் மாலிக் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசிய சந்திப்பில் தனக்கு ஏற்பட்ட அதிருப்தி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!