Tamilnadu
“திமிர் பிடித்தவர்; விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்? என்கிறார்”: மோடி மீது மேகாலயா ஆளுநர் குற்றச்சாட்டு!
மேகலாய ஆளுநர் ஆளுநர் சத்ய பால் மாலிக் சமீபகாலங்களில் மோடி அரசு செய்யும் குற்றங்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக கண்டித்து வருகிறார். மேலும் ஆளுநரின் அதிகாரங்களில் ஒன்றிய அரசின் தலையீடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் சத்ய பால் மாலிக் அவரிடம் சில கோரிக்கைகளை வைத்ததாகவும், அதற்கு பிரதமர் மோடி முறையாக பதில் அளிக்கவில்லை என மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஹரியானாவில் நடந்த விழாவில் பேசிய, “நான் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவர் மிகவும் திமிர் பிடித்தவர். அவரிடம் நம்முடைய விவசாயிகள் 500 பேர் பலியாகியுள்ளதாக கூறினேன்.
அதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்? எனக் கேட்கிறார். அதற்கு நான் நீங்கள்தான் நாட்டின் பிரதமர் எனக் கூறினேன். இதனால் வாக்குவாதம் ஆகும் சூழல் ஏற்படவே, பின்னர் அவரை என்னை அமித்ஷாவை சந்திக்குமாறு கூறிவிட்டார். அதனால் நான் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது,
அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள். தொடர்ந்து என்னை சந்தியுங்கள்'' என அமித்ஷா கூறியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஆளுநர் சத்தியபால் மாலிக் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசிய சந்திப்பில் தனக்கு ஏற்பட்ட அதிருப்தி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!