Tamilnadu

மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை: விசாரணையில் பகீர் தகவல்!

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா. இவர்கள் இருவருமே தனியார் வங்கியில் பணியாற்றி வந்தனர். இந்த தம்பதிக்கு தரன், தாஹன் இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று மணிகண்டனின் வீடு வெகுநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. குழந்தைகளும் விளையாட வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் கதவை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக இருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து நான்கு பேரின் உடலையும் மீட்டு போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மணிகண்டன் பெட்ரோல் பங்க் திறக்கப் போவதாக கூறி தெரிந்தவர்களிடம் ரூ.75 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் அமைக்காமல் கடனாகக் கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்துள்ளார்.

இதில் இவருக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்து விட் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: இளம் பெண் கத்தியால் குத்தி கொலை.. சித்தப்பாவை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?