Tamilnadu
டிக்கெட் கவுண்டரில் துப்பாக்கிமுனையில் ₹1.35 லட்சம் கொள்ளை: அதிகாலையில் துணிகரம் - போலிஸ் தீவிர விசாரணை!
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இன்று காலை டிக்கெட் எடுப்பதற்காகக் கவுண்டர் மூடப்பட்டிருந்தைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், டிக்கெட் கவுண்டர் உள்ளே பயணிகள் சென்று பார்த்தபோது மீனா என்ற ஊழியரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு, அவரை மீட்டு போலிஸாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் அந்த ஊழியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூன்று பேர் டிக்கெட் எடுப்பதற்காக வந்தனர்.
அவர்கள் திடீரென துப்பாக்கியைக் காட்டி ஊழியரின் கை, கால்களைக் கட்டிப்போட்டுள்ளனர். பிறகு வசூல் செய்யப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து அந்த கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் குறித்தான அடையாளங்களைத் தேடி வருகின்றனர். ரயில் நிலையத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!