Tamilnadu
1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு- இல்லம் தேடி கல்வி தொடரும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிச.25-ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்த முதலமைச்சர், 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை பள்ளிகள் செயல்படத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம்போல் நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர்களுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடரும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!