Tamilnadu
மருமகளுடன் சண்டை.. தீவைத்து தற்கொலை செய்து கொண்ட மாமியார் - போலிஸ் தீவிர விசாரணை !
காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா. இவரது மகன் ராகவேந்திரன். மருமகன் அனுஷ்யா தேவி. இந்நிலையில், மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கிரிஜா சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த கிரிஜா வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மாமியார் மருமகள் சண்டையில், மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!