Tamilnadu
மருமகளுடன் சண்டை.. தீவைத்து தற்கொலை செய்து கொண்ட மாமியார் - போலிஸ் தீவிர விசாரணை !
காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா. இவரது மகன் ராகவேந்திரன். மருமகன் அனுஷ்யா தேவி. இந்நிலையில், மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கிரிஜா சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த கிரிஜா வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மாமியார் மருமகள் சண்டையில், மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!