Tamilnadu
மருமகளுடன் சண்டை.. தீவைத்து தற்கொலை செய்து கொண்ட மாமியார் - போலிஸ் தீவிர விசாரணை !
காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா. இவரது மகன் ராகவேந்திரன். மருமகன் அனுஷ்யா தேவி. இந்நிலையில், மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கிரிஜா சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த கிரிஜா வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மாமியார் மருமகள் சண்டையில், மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!