Tamilnadu
செல்போன் பயன்படுத்தியதால் கண்டித்த பெற்றோர்.. விபரீத முடிவெடுத்த 12ஆம் வகுப்பு மாணவி!
திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சுதா என்ற மகள் இருந்தார்.
இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதா அடிக்கடி வீட்டில் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
நேற்று முன்தினம் சுதா மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் கண்டித்து விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சுதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பயன்படுத்தியதைப் பெற்றோர்கள் கண்டித்தால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!