Tamilnadu
செல்போன் பயன்படுத்தியதால் கண்டித்த பெற்றோர்.. விபரீத முடிவெடுத்த 12ஆம் வகுப்பு மாணவி!
திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சுதா என்ற மகள் இருந்தார்.
இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதா அடிக்கடி வீட்டில் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
நேற்று முன்தினம் சுதா மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் கண்டித்து விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சுதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பயன்படுத்தியதைப் பெற்றோர்கள் கண்டித்தால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!