Tamilnadu
“10 துறைகளை உள்ளடக்கிய சிறப்புக் குழு” : பெண் சிசு கொலைகளை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை ஆட்சியர்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நலத்துறை, வருவாய், காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட 10 துறைகளை உள்ளடக்கி சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவினர் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிசுக் கொலைகள் தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். குழந்தைகளைப் பராமரிக்க முடியாத பெற்றோர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தைகளை வழங்கினால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!
-
”அடுத்து வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும்... மக்களுக்கான திட்டங்கள்” :துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!