Tamilnadu
“10 துறைகளை உள்ளடக்கிய சிறப்புக் குழு” : பெண் சிசு கொலைகளை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை ஆட்சியர்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நலத்துறை, வருவாய், காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட 10 துறைகளை உள்ளடக்கி சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவினர் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிசுக் கொலைகள் தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். குழந்தைகளைப் பராமரிக்க முடியாத பெற்றோர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தைகளை வழங்கினால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!