Tamilnadu
சொகுசு வாழ்க்கைக்கு ஆசை.. திட்டம்போட்டு தாய்மாமா வீட்டிலேயே கைவரிசை காட்டிய மைத்துனர் : சிக்கியது எப்படி?
காஞ்சிபுரம், மாருதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன். இவர் ஆடிட்டராக வேலைபார்த்து வருகிறார். இவரின் இரண்டு சகோதரர்களுக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி மேகநாதன் வீட்டில் இல்லாதபோது முகமூடி அணிந்த நான்குபேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து, 44 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலிஸார் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேகநாதனின் மைத்துனரே நண்பர்களைக் கொண்டு வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் சந்தானகிருஷ்ணன், அவரது நண்பர்கள் கௌதம், சிவக்குமார் ஆகிய மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம் திருடியதும் விசாரணையில் தெரிந்தது. பின்னர் இவர்களிடமிருந்த 44 சவரன் நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!