Tamilnadu
“பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தை பலி? - பெற்றோர் தலைமறைவு” : தீவிர விசாரணையில் போலிஸார் - பின்னணி என்ன?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நல குறைவு காரணமாக 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த கிராம செவிலியரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவிக்கவே சந்தேகமடைந்த கிராம செவிலியர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ) தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து வி.ஏ.ஓ முணியாண்டி விசாரிக்கும் போதும் முறையான பதில் இல்லாததால், இந்த சம்பவம் தொடர்பாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முணியாண்டி புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிசார் முத்துப்பாண்டி - கௌசல்யா வீட்டிற்கு சென்ற போது பெற்றோர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.
மேலும் பெற்றோர்கள் தலைமறைவாக இருப்பதால் பெண் சிசு கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் பெற்றோர்களை தேடி வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் பெண்சிசு கொலை அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!