Tamilnadu
“இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை”: போலிஸில் சிக்கிய தொழிலதிபர் - பின்னணி என்ன?
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் பிஜாய் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 22 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் சமீபத்தில் சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றுக்கு வெளியிட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “எனது மகள் கடந்த 4 ஆண்டுகளாக போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளார். எனது மகளுக்கு சூரத்கல் போலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட காட்டிப்பள்ளா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் முகமது ஷெரீப் (வயது 47) என்பவர் போதைப்பொருள் வாங்கி கொடுத்து போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளார். மேலும் போதைப்பொருள் கொடுத்து எனது மகளை அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி உருவா போலிஸில் புகார் கொடுத்தேன். ஆனால் போலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உங்கள் அமைப்பு மூலம் போதையின் பிடியில் சிக்கியுள்ள மகளை மீட்கவும், அவளை போதைக்கு தள்ளிய முகமது ஷெரீப் மற்றும் அவரது நண்பர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சம்பவம் பற்றி விசாரணை நடத்தி முகமது ஷெரீப்பை கைது செய்யும் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் மங்களூரு மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமாரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சூரத்கல் போலிஸாருக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சூரத்கல் போலிஸார் வழக்குப்பதிவு செய்து முகமது ஷெரீப்பை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 3 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும், அதில், ஒரு மனைவி கோவாவிலும், மற்றொருவர் மராட்டியத்திலும், இன்னொரு மனைவி மங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில் முகமது ஷெரீப், அந்த பெண்ணின் மகளை தான் போதைக்கு அடிமையாக்கி முகமது ஷெரீப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், மேலும் அந்த பெண்ணுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
கைதான குற்றவாளியிடம் போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!