Tamilnadu
சீரியலில் மூழ்கிய பெண்கள்; நைசாக சென்று நகைகள் அபேஸ்: ஆடிட்டர் வீட்டில் ஆட்டையப்போட்டவர்களுக்கு வலைவீச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பக்குதியில் உள்ள மாருதி நகர் சங்கரன் தெருவில் வசித்து வருபவர் மேகநாதன். பட்டையக் கணக்காளரான இவரது வீட்டில்தான் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்நிலையில் பணி நிமித்தமாக மேகநாதன் வெளியூர் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் அவரது மனைவியும் உறவுக்கார பெண்ணும் சேர்ந்து மதியம் சுவாரஸ்யமாக டிவியில் சீரியல் பார்த்திருக்கிறார்கள். மேலும் வாயில் கதவையும் முறையாக பூட்டாமல் இருந்திருக்கிறார்கள்.
அப்போது சமயம் பார்த்து நைசாக உள்ளே வந்த இருவரும் சீரியலில் மூழ்கிய பெண்களை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.
இதனையத்து வெளியே காவலுக்கு இருந்த இருவருடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருக்கிறார். பின்னர் கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்த புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட எஸ்.ஐ. ஜூலியஸ் சீசர், தாலுகா காவல் ஆய்வாளரும் ராஜகோபால் உள்ளிட்ட போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமிராக்கள் எதுவும் பொருத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலிஸாருக்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அப்பகுதிகளில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!