Tamilnadu
சிறுநீரக பாதிப்பால் மகன் தற்கொலை.. துக்கம் தாளாமல் விபரீத முடிவு எடுத்த தாய்: சோகத்தில் மூழ்கிய மக்கள் !
கிருஷ்ணகிரி மாவட்டம், காரக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இளைஞரான இவருக்குச் சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து, தாய் கஸ்தூரியின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து மகனுக்குக் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதற்காகச் சிகிச்சை ஏற்பாட்டையும் செய்து வந்துள்ளனர்.
அப்போது, திடீரென இளைஞர் பிரேம்குமாருக்கு காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை தள்ளிப்போனது. இதனால் பிரேம்குமார் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரேம்குமால் சனிக்கிழமை இரவு விஷமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகன் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தாயார் கஸ்தூரியும் தற்கொலை செய்து கொண்டது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!