Tamilnadu
சிறுநீரக பாதிப்பால் மகன் தற்கொலை.. துக்கம் தாளாமல் விபரீத முடிவு எடுத்த தாய்: சோகத்தில் மூழ்கிய மக்கள் !
கிருஷ்ணகிரி மாவட்டம், காரக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இளைஞரான இவருக்குச் சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து, தாய் கஸ்தூரியின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து மகனுக்குக் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதற்காகச் சிகிச்சை ஏற்பாட்டையும் செய்து வந்துள்ளனர்.
அப்போது, திடீரென இளைஞர் பிரேம்குமாருக்கு காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை தள்ளிப்போனது. இதனால் பிரேம்குமார் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரேம்குமால் சனிக்கிழமை இரவு விஷமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகன் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தாயார் கஸ்தூரியும் தற்கொலை செய்து கொண்டது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!