Tamilnadu
சாலையில் நிர்வாணமாகத் திரிந்த நபர்.. ஆடை உடுத்தி உணவு ஊட்டிய மனிதி : நெகிழ்ச்சி சம்பவம்!
திருநெல்வேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நெல்லை - மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த நந்தினி உடனே வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர், இருசக்கர வாகனத்திலிருந்த சால்வை துணியை எடுத்துச் சென்று, அந்த நபரின் இடுப்பில் கட்டிவிட்டார். இதையடுத்து அருகிலிருந்த கடைக்குச் சென்று உணவு வாங்கி வந்து அவரே அந்த நபருக்கு ஊட்டிவிட்டார்.
ஒருவர் அசிங்கமாக இருந்தாலே முகம் சுளிக்கும் இந்த காலத்தில் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆடை உடுத்த செய்து, உணவு ஊட்டிய மனிதாபிமானத்தை அனைவரும் வெகுவாக விழந்து பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!