Tamilnadu
வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா சேவியர் பிரிட்டோ? - வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய விஜய்யின் மாமா!
மாஸ்டர் பட தயாரிப்பாளரும் மற்றும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முதல் நடைபெற்று வரும் செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சீன நிறுவனமான ஷாவ்மி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் (logistics) பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் அடையாறில் உள்ள அவரது இல்லம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள கேரி இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ், பாரிமுனை ஏற்றுமதி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன செல்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்ததில் அதிகளவிலான வருமானத்தை பிரிட்டோவின் நிறுவனம் மறைத்திருப்பதாகவும் அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கு முகாந்திரம் இருப்பதன் காரணமாகவே சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!