Tamilnadu
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார்; அவருக்கு வயது 80!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பரும் அவரது உதவியாளருமான கோ.சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோ.சண்முகநாதனின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் கலைஞரிடம் சுமார் 48 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர் சண்முகநாதன். கலைஞரின் கண் அசைவிற்கு ஏற்ப, அவரது எண்ணங்களை உள்வாங்கி செயலாற்றியவர். கலைஞரின் நிழலாகவே செயல்பட்டவர் அவர்.
தமிழ்நாட்டு காவல்துறையில் சுருக்கெழுத்து நிரூபராக பணியாற்றிய சண்முகநாதன், 1969ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
தலைவர் கலைஞர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த போது அவரது கருத்துகளை எழுத்து மூலம் வெளியிட்டவர் சண்முகநாதன்.
தற்போது சண்முகநாதனின் மறைவு தி.மு.கவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!