Tamilnadu
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார்; அவருக்கு வயது 80!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பரும் அவரது உதவியாளருமான கோ.சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோ.சண்முகநாதனின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் கலைஞரிடம் சுமார் 48 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர் சண்முகநாதன். கலைஞரின் கண் அசைவிற்கு ஏற்ப, அவரது எண்ணங்களை உள்வாங்கி செயலாற்றியவர். கலைஞரின் நிழலாகவே செயல்பட்டவர் அவர்.
தமிழ்நாட்டு காவல்துறையில் சுருக்கெழுத்து நிரூபராக பணியாற்றிய சண்முகநாதன், 1969ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
தலைவர் கலைஞர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த போது அவரது கருத்துகளை எழுத்து மூலம் வெளியிட்டவர் சண்முகநாதன்.
தற்போது சண்முகநாதனின் மறைவு தி.மு.கவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!