Tamilnadu
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த கோ.சண்முகநாதன் காலமானார்; அவருக்கு வயது 80!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பரும் அவரது உதவியாளருமான கோ.சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோ.சண்முகநாதனின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் கலைஞரிடம் சுமார் 48 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர் சண்முகநாதன். கலைஞரின் கண் அசைவிற்கு ஏற்ப, அவரது எண்ணங்களை உள்வாங்கி செயலாற்றியவர். கலைஞரின் நிழலாகவே செயல்பட்டவர் அவர்.
தமிழ்நாட்டு காவல்துறையில் சுருக்கெழுத்து நிரூபராக பணியாற்றிய சண்முகநாதன், 1969ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
தலைவர் கலைஞர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த போது அவரது கருத்துகளை எழுத்து மூலம் வெளியிட்டவர் சண்முகநாதன்.
தற்போது சண்முகநாதனின் மறைவு தி.மு.கவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
-
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!