Tamilnadu
கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. உயிரைக் காப்பாற்றிய போலிஸ்: குவியும் பாராட்டு!
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் போலிஸார் சபின், ராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனே கடலுக்குள் நீந்திச் சென்று அந்த நபரைக் கரைக்கு மீட்டு வந்தனர். பின்னர் அவரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பணீந்திரகுமார் என்பது தெரியவந்தது. மேலும் இவர் சென்னையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்தக் காதல் திடீரென முறிந்ததால் பணீந்திரகுமார் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பெசன்ட் நகர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரைக் காப்பாற்றிய போலிஸாருக்கு காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் காவலர்களுக்குப் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!