Tamilnadu
கணவனை கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்; நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி? அரும்பாக்கத்தில் பரபரப்பு!
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (40). இவருக்கும் இவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன் தினம் இரவு ஆனந்த குமாருக்கும் அவரின் மனைவி தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனலட்சுமியை கையில் ரத்தக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தகவல் அறிந்த அரும்பாக்கம் போலிஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நேற்று (டிச,.19) காலை அரும்பாக்கம் போலிஸார் தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு பூட்டு மாட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தது. சந்தேகமடைந்த போலிஸார் பூட்டை உடைத்து பார்த்த போது ஆனந்த குமார் சிமெண்ட் சீட்டுக்கு கீழே இருக்கும் பைப்பில் கேபிள் டிவி ஒயரால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். தலையில் ரத்தம் காயம் இருந்தது.
இதையடுத்து வீட்டிற்கு தடயவியல் துறையினர் வந்து தடயங்களை சேகரித்தனர். அரும்பாக்கம் போலிஸார் ஆனந்தகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன் ஆனந்த குமாரை தான் கொலை செய்ததாக மனைவி தனலட்சுமி ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!