Tamilnadu
”எங்க டார்கெட்டே இதுதான்; வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையடித்து வந்த கில்லாடி தம்பதி” : விசாரணையில் பகீர்!
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை, இலுப்பூர், பொன்னமரவாதி, மாத்தூர், மண்டையூர் ஆகிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக போலிஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போலிஸார் மாத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் நகார்கோவில் பகுதியைச் சேர்ந்த லதா, மதுரையைச் சேர்ந்த ராமு என்பது தெரிந்தது. மேலும் லதா ராமுவை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதி புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து யாரும் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 30 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்த போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”