Tamilnadu
”அவங்க மன வேதனையை கொட்டித் தீர்க்க விடுங்க” - பெற்றோர், ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சூளியாபட்டியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரெங்கநாதன் நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அங்கிருந்த மாணவிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்படி கூறினார். அப்போது மாணவிகள் எழுந்து வந்து தமிழ்தாய் வாழ்த்து பாடி அச்சத்தினர். இதைக்கேட்ட அமைச்சர் மாணவிகளுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதோடு வெரிகுட் என்று கூறி நன்றியும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்திற்கு யார் யாரெல்லாம் காரணமாக இருக்கின்றார்களோ அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவார்கள். இருப்பினும் மாணவிகள் தயவு செய்து தற்கொலை முடிவை கைவிடுங்கள்.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காகத்தான் அரசு 1098, 14477 உள்ளிட்ட எண்களை கொடுத்திருக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டு புகார் அல்லது வேதனை, சந்திக்;கும் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை.
குழந்தைகளின் மனஅழுத்தத்தை போக்கிடுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பெற்றோர்களாக இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்தாலும் முதலில் குழந்தைகள் சொல்ல வருவதை காதுகொடுத்து கேளுங்கள். குழந்தைகள் சொல்ல வந்ததை மனவேதனையை கொட்டித் தீர்க்க விடுங்கள். அதில் உண்மைத் தன்மை இருக்கிறதா? சந்தேகத்தில் சொல்கிறார்களா? பயத்தில் சொல்கிறார்களா? என்பதை அலசி ஆராய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று கூறினார்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!