Tamilnadu
PUBG விளையாடுவதற்காக, அப்பா சேர்த்து வைத்த ரூ.8 லட்சத்தை திருடிய சிறுவர்கள்.. சென்னையில் அதிர்ச்சி!
பப்ஜி விளையாடுவதற்காக சிறுவர்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே ரூ.8 லட்சம் பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் நடராஜன். இவரது ஒரு மகன் 10ஆம் வகுப்பும், மற்றொரு மகன் 12ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
நடராஜன் வீடு வாங்குவதற்காக, மளிகைக்கடை வருமானம் மூலம் சிறுகச் சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார். தான் சேமித்து வைக்கும் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து மகன்களை விசாரித்துள்ளார்.
பப்ஜி விளையாடுவதற்காக 8 லட்சம் பணத்தை திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், கேமில் அடுத்த லெவல் செல்லலாம் என தங்களது நண்பன் கூறியதால் அவனது பெற்றோரிடம் பணத்தைக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் இதுகுறித்து போலிஸில் புகார் அளித்தார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடராஜன் அளித்த புகாரின் பேரில் சிறுவர்களின் நண்பன் மற்றும் அவனது பெற்றோர் ராஜசேகர், மெரிட் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பப்ஜி விளையாடுவதற்காக சொந்த வீட்டிலேயே லட்சக்கணக்கில் பணம் திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!