Tamilnadu
“பெற்றோர் அலட்சியத்தால் பூட்டிய வீட்டில் மாட்டிக் கொண்ட கைக் குழந்தை” : பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை!
கன்னியாகுமரி மாவட்டம், அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு இரண்டரை மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வேலைக்குச் சென்ற கணவர் நிதினை வழியனுப்புவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார் சிந்து. அப்போது குழந்தை வீட்டில் தூக்கிக் கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க கதவு தானாக மூடிக்கொண்டது.
இதனால் அதிர்ச்சியைச் சிந்து வீட்டின் கதவைப் பலமுறை திறக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. பின்னர் இதை அறிந்த அக்கம் பக்கத்தினரும் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் யாராலும் கதவைத் திறக்க முடியவில்லை.
இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர்.
அப்போது குழந்தை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. பிறகு குழந்தையை மீட்டு பெற்றோரிடம் தீயணைப்புத்துறை ஒப்படைத்தனர். மேலும் குழந்தையைக் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!