Tamilnadu
கடன் தொல்லை; மனைவி மகனை கொன்று தற்கொலை? டெய்லர் மரணத்தில் விசாரணையை முடுக்கிவிட்ட சென்னை போலிஸ்!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி வனிதா. கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பத்து வயதில் வெற்றி வேல் என்ற மகனும் இருந்திருக்கிறான்.
சிவாஜிக்கு போதிய வருமானம் இல்லாததால் அதிக அளவில் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தாததால் சிவாஜி கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிகாலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவாஜி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். மனைவி வனிதா கழுத்தில் கயிறு இறுகி நிலையில் தரையிலும் அவர்களின் மகன் வெற்றிவேல் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறான்.
சம்பவம் தொடர்பாக வீட்டில் சோதனையிட்டபோது கடன் தொல்லையினால் தற்கொலை செய்துக்கொள்வதாக சிவாஜி கடிதம் எழுதி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வனிதா மற்றும் வெற்றிவேலை கொலை செய்துவிட்டு சிவாஜி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!