Tamilnadu
வெடி சத்தத்துடன் திடீர் நில அதிர்வு; பீதியில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் - கரூரில் பரபரப்பு!
கரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள தாந்தோன்றிமலை, கருப்புக்கவுண்டன், புதூரில் பகுதியில் உள்ள வீடுகளில் திறந்தருந்த கதவுகள் தானாக மூடியதால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
கரூரில், இன்று காலை 11.05 மணியளவில் திடீரென்று அதி பயங்கரமான வெடிச்சத்தம் ஒலித்த அடுத்த நொடி சில வினாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், வெங்கமேடு, கரூர், தாந்தோன்றிமலை போன்ற பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில், நில அதிர்வு காரணமாக தாந்தோன்றிமலை, கருப்பக்கவுண்டன்புதூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் திறந்து வைக்கப்பட்டிருந்த கதவுகள் தானாக மூடிக்கொண்டது. இதையடுத்து வீட்டில் இருந்த பெண்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலஅதிர்வு மற்றும் வெடி சத்தத்திற்கு காரணம் தெரியாமல் பொதுமக்கள் தடுமாறினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல வெடி சத்தத்துடன் கூடிய லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
பருவநிலை மாற்றம் காரணமாக வானில் தற்காலிகமாக உருவாகும் காற்றுப் பந்தின் வெடிப்பு காரணமாக இந்த நிகழ்வு ஏற்பட்டதாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!