Tamilnadu
நண்பனை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்... விசாரணையில் பகீர் தகவல்!
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இளைஞரான இவர் செங்கல்பட்டு பகுதியில் குப்பைகளைப் பொறுக்கி, அதைக் கடையில் போட்டு கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சிவராஜ் தனது நண்பருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவராஜ் அங்கிருந்த கருங்கல் ஒன்றை எடுத்து தனது நண்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் சிவராஜிடம் போலிஸார் விசாரணை செய்தபோது, மது குடிக்கும்போது தனது தாயைப் பற்றி அவமரியாதையாகப் பேசியதால் கல்லால் அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து சிவராஜை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!
-
சட்டம் ஒழுங்கு பற்றி பேச மிக்சர் பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? : முரசொலி கடும் விமர்சனம்!
-
பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்
-
“தமிழுக்காக ஒன்றிய அரசு செலவு செய்த தொகை எவ்வளவு?” - தயாநிதி மாறன் எம்.பி. சரமாரி கேள்வி!