Tamilnadu
நாய் கடித்ததால் மயங்கிய குரங்கு; தனது மூச்சுக்காற்றை செலுத்தி காப்பாற்றிய ஓட்டுநர்: நெகிழ்ச்சி சம்பவம்
பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி குரங்கு ஒன்றைத் தெரு நாய்கள் துரத்திக் கடித்துள்ளது.
இதில் அந்த குரங்கிற்குப் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்துள்ளது. இதைப்பார்த்த பிரபு குரங்குக்கு தண்ணீர் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது குரங்கு தண்ணீர் குடிக்காமலிருந்தது.
உடனே பிரபு தாமதிக்காமல் குரங்கின் வாயோடு தன் வாயை வைத்து மூச்சுக்காற்று செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு துள்ளி எழுந்த குரங்கை மீட்டு அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு குரங்கை வனத்துறையிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில் உயிருக்குப் போராடிய குரங்கிற்கு முதலுதவி செலுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து கார் ஓட்டுநர் பிரபுவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!