Tamilnadu
“நான் லஞ்சம் பெறுவதில்லை” : காவல் நிலையத்தில் எச்சரிக்கை பேனர் வைத்த ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு!
மதுரை மாநகர சைபர் கிரைம் பிரிவில் சரவணன் பணியாற்றி வந்தார். பின்னர் இவர் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சரவணன் கடந்த 25ம் தேதி காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் காவல் நிலையத்தில் “லஞ்சம் கொடுக்க வேண்டாம்” என ஆய்வாளர் சரவணன் வைத்துள்ள விளம்பரப் பலகை அப்பகுதி மக்கள் வரவேற்பே பெற்றுள்ளது. அந்த விளம்பரப் பலகையில், “ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காவல்துறை ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள சரவணன் ஆகிய நான், யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை.
என் பெயரைச் சொல்லிக் கொண்டு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரைச் சுமுகமாக முடித்துத் தருவதாகக் கூறி யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல் ஆய்வாளரின் இந்த விளம்பரப் பலகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆய்வாளரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!