Tamilnadu
“நான் லஞ்சம் பெறுவதில்லை” : காவல் நிலையத்தில் எச்சரிக்கை பேனர் வைத்த ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு!
மதுரை மாநகர சைபர் கிரைம் பிரிவில் சரவணன் பணியாற்றி வந்தார். பின்னர் இவர் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சரவணன் கடந்த 25ம் தேதி காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் காவல் நிலையத்தில் “லஞ்சம் கொடுக்க வேண்டாம்” என ஆய்வாளர் சரவணன் வைத்துள்ள விளம்பரப் பலகை அப்பகுதி மக்கள் வரவேற்பே பெற்றுள்ளது. அந்த விளம்பரப் பலகையில், “ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காவல்துறை ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள சரவணன் ஆகிய நான், யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை.
என் பெயரைச் சொல்லிக் கொண்டு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரைச் சுமுகமாக முடித்துத் தருவதாகக் கூறி யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல் ஆய்வாளரின் இந்த விளம்பரப் பலகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆய்வாளரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?