Tamilnadu
குடிபோதையால் நிகழ்ந்த விபரீதம்.. தாயைக் கொன்ற மகனைக் கைது செய்த போலிஸ்!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலையம்மாள். இவரது கணவர் இறந்ததை அடுத்து மகன் பாவைநாதன் மற்றும் மருமகள் சரண்யா ஆகியோருடன் வசித்து வந்தார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாவைநாதன் தினமும் குடித்துவிட்டு தாய் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார்.
அப்போது தாய் அஞ்சலையைம்மாளுக்கும், மகன் பாவைநாதனுக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாவைநாதன் வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாயின் இடுப்பில் குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பாவைநாதனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!