Tamilnadu
அடுத்த 10 ஆண்டில் விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கும்: அமைச்சர் பி.மூர்த்தி நம்பிக்கை!
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று உலக மண்வள தினம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டார்.
விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில்,"தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி வேவைக்கு அதிகமாகவே உள்ளது. இறக்கை உரங்களால் மண் வளமாகவும், வசமாகவும் இருந்தது. ஆனால் இப்போது மண் அந்தளவிற்குச் சத்துடன் இல்லை.
மண்புழுவைக் கூட உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளோம். இறக்கை விவசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். அடுத்த பத்தாண்டில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்.
100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!