Corona Virus

”கொரோனா இருந்தாலே ஒமைக்ரான் என எண்ண வேண்டாம்; ஆனால் டெல்டாவே இன்னும் போகவில்லை” - ராதாகிருஷ்ணன் வார்னிங்!

மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடும் கட்டுப்பாடும் இருக்கும் பட்சத்தில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

”கொரோனா இருந்தாலே ஒமைக்ரான் என எண்ண வேண்டாம்; ஆனால் டெல்டாவே இன்னும் போகவில்லை” - ராதாகிருஷ்ணன் வார்னிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் தொண்டு நிறுவனம் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் தன்னலமற்று பணியாற்றிய சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்பினர் என ஏராளமானோர் ஒவ்வொரு வகையில் மக்களுக்கு உதவினார் அந்த வகையில் சுமார் 60க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களுக்கு விருதினை ராதாகிருஷ்ணன், தாயகம் கவி, விக்கிரமராஜா ஆகியோர் பரிசளித்து கவுரவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

கொரோனா காலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பணியாற்றின. ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பும் கொரோனா காலத்தில் சமூக சேவையாற்றின.

தற்போதைய சூழலில் ஒமைக்ரானை பொறுத்தவரை பதற்றம் அடையக்கூடிய உறுமாற்றம் கொண்டதாக இல்லை. விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தொடர் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகின்றது.

”கொரோனா இருந்தாலே ஒமைக்ரான் என எண்ண வேண்டாம்; ஆனால் டெல்டாவே இன்னும் போகவில்லை” - ராதாகிருஷ்ணன் வார்னிங்!

தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்று கூறிய அவர், கொரோனா பாஸிட்டிவ்-யை ஒமைக்ரான் பாசிட்டிவ் என எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

4502 பயணிகளை பரிசோதனை செய்ததில் இதுவரை தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதல்கட்ட டேக்பாத் பரிசோதனையில் 5 பேருக்கு நெகட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது. 1.27 லட்சம் தெருக்களில் 1.25 லட்சம் தெருக்களில் நோய் தொற்று கிடையாது என்று கூறிய அவர், 100 பேரில் சோதனை செய்தால் 1க்கும் குறைவானவருக்கே தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

தொற்று பரவலை தடுக்க மாநில எல்லையில் கண்காணிக்கப்படுவதாகவும், மத்திய அரசின் வழிகாட்டுதலை முழுமையாக கடைபிடிப்பதாகவும் கூறிய அவர், தொற்று பாதித்த நபர்களை Contact tracing எடுத்து வருவதாக பேசினார். தமிழகத்தில் தான் 314 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. அதில் 12 ஆய்வகங்களில் மரபணு சோதனை செய்யப்படுகிறது என்ற அவர், 638 பேர் டெங்கு சிகிச்சை மாநிலம் முழுவதும் பெற்று வருகின்றனர்.

வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை இருந்தாலும் மக்கள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். டெல்டா வைரஸ் இன்னும் போகவில்லை. அது தான் தற்போது அதிகரித்து வருகிறதாக எச்சரித்த அவர், விழிப்புணர்வோடும், கட்டுப்பாடோடும் மக்கள் இருக்க வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories