Tamilnadu
சாலை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக கூறும் வேலுமணி ஆதாரத்தை வெளியிடத் தயாரா?: அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!
கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக கூறும் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை இரண்டு நாட்களில் வெளியிடட்டும் என்றும், தேர்தலுக்காக மக்களை வேலுமணி ஏமாற்றி உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டுள்ளார். இதில் கோவை மாவட்டத்திற்குத் தேவையான வளர்ச்சி பணிகளுக்கான பட்டியல்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஈஸ்வரன் வழங்கினார்.
இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைக்கப்படும். அவர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார்.
அதேபோல 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார் என்ற கேள்விக்கு : அவை எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எந்தெந்த சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது, அதன் வேலை உத்தரவு, வேலை தொடக்கம் ஆகியவற்றின் பட்டியலை தெளிவாக வெளியிடட்டும்.
நிர்வாக அனுமதி பெறாமல், டெண்டர்விடாமல் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலை பணிகள் துவங்கப்பட்டது. நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடட்டும். கோவை மாநகராட்சியின் நிதி நிலை மோசமாக உள்ளது. சாலை பணிகள் குறித்து வேலுமணியின் குற்றச்சாட்டை ஆராய்ந்து பார்த்தோம். அது போன்று ஒன்றும் இல்லை. அவர் தொடங்கியதாக சொல்லும் பணிதேர்தலுக்காக தொடங்கபட்ட பணி. 300 பணி என்று சொல்பவர் பட்டியல் வெளியிட்டிருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!