Tamilnadu
“அத்தியாவசியப் பொருட்கள் மீது GST வரியை எப்போது குறைப்பீர்கள்?” : மக்களவையில் தயாநிதி மாறன் MP கேள்வி!
கொரோனா பேரிடர் தொடங்கிய பிறகு நலிவடைந்த பல்வேறு வகையான தொழில்களும் அதன் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களின் விற்பனைகள் பாதிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வியாபாரத்தை அதிகரிக்கவும், ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கவும் ஒன்றிய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
கொரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்த பல்வேறு வகையான தொழில்களும் அதன் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து ஏதேனும் ஆலோசனை கூட்டமோ அல்லது ஆய்வறிக்கையினையோ ஒன்றிய அரசு தயார் செய்துள்ளனவா? அப்படியெனில் அதன் விவரங்கள் என்ன? கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு பல்வேறு வகையான பொருட்களுக்கான தேவை மற்றும் விற்பனை குறைந்துள்ளது என ஏதேனும் தொழில் நிறுவனங்களோ, வணிகர்களோ நிதி அமைச்சகத்திடம் விடுத்த கோரிக்கைகள் என்ன என்பதைத் தெரியப்படுத்தவும்.
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைப்பது எப்போது என்பது குறித்தும் நிதி அமைச்சகம் ஏதேனும் திட்டம் வகுத்துள்ளனவா? எனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!