Tamilnadu
“இனி பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது” : பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன?
தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விழியிழந்த மகளிர் மறுவாழ்வு மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மழையின் காரணமாகப் பள்ளிகளின் பாடங்கள் குறைக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் எடுக்கப்பட்டு மாடங்கள் நடத்தப்படும். ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது.
அதேபோல், தனியார்ப் பள்ளிகளுக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!