Tamilnadu
“இனி பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது” : பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன?
தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விழியிழந்த மகளிர் மறுவாழ்வு மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மழையின் காரணமாகப் பள்ளிகளின் பாடங்கள் குறைக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் எடுக்கப்பட்டு மாடங்கள் நடத்தப்படும். ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது.
அதேபோல், தனியார்ப் பள்ளிகளுக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!