Tamilnadu
நள்ளிரவில் ஓய்வில்லாமல் மழை பாதித்த பகுதிகளில் கனிமொழி MP - அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு: குவியும் பாராட்டு!
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்ற கனிமொழி எம்.பி நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட நிலையில், நள்ளிரவு நேரத்திலும் தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள ஆசிரியர் காலனி பகுதிக்கு திடீர் விசிட்டாக சென்று, ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் , ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
மேலும் அப்பகுதி மக்களிடமும் குறைகளை கேட்டறிந்த கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றப்படும் என உறுதி அளித்தனர். நள்ளிரவு நேரத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மழைநீரை அகற்ற ஆய்வு மேற்கொண்டது மக்களிடம் வரவேற்பு பெற்றது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Also Read
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!