Tamilnadu
நள்ளிரவில் ஓய்வில்லாமல் மழை பாதித்த பகுதிகளில் கனிமொழி MP - அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு: குவியும் பாராட்டு!
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்ற கனிமொழி எம்.பி நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட நிலையில், நள்ளிரவு நேரத்திலும் தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள ஆசிரியர் காலனி பகுதிக்கு திடீர் விசிட்டாக சென்று, ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் , ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
மேலும் அப்பகுதி மக்களிடமும் குறைகளை கேட்டறிந்த கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றப்படும் என உறுதி அளித்தனர். நள்ளிரவு நேரத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மழைநீரை அகற்ற ஆய்வு மேற்கொண்டது மக்களிடம் வரவேற்பு பெற்றது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!