Tamilnadu
ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... மடக்கிப் பிடித்த போலிஸ் : நடந்தது என்ன?
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அதிவேகமாக சொகுசு கார் ஒன்று சென்றது. அதிலிருந்து ஒரு பெண்ணின் கூச்சல் கேட்டது. அப்போது சாலையில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலிஸார் உடனே காரை மடக்கி நிறுத்தினர்.
அப்போது இளம்பெண் காரில் இருந்த வாலிபர்களுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலிஸார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில் இந்த இளம்பெண் ஐ.டி நிறுவனமொன்றில் பணியாற்றி வருவது தெரியவந்தது.
நேற்று இரவு அந்தப் பெண் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் பங்கேற்று மது குடித்துள்ளார். இந்நிகழ்வில் அந்தப் பெண்ணுக்கு மூன்று இளைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
பின்னர் இவர்கள் அந்த பெண்ணை வீட்டில் விட்டு விடுவதாகக் கூறி காரில் அழைத்து வந்துள்ளனர். அப்போது மூன்று இளைஞர்களும் அந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
-
புதுப்பொலிவு பெற்ற தமிழ்நாடு ஆவணக்காப்பகம்: Japanese Tissue முறையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
-
சென்னையில் 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் : 2 அமைச்சர்கள் ஆய்வு!
-
“பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை” : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
தமிழ்நாட்டில் மதமாற்றம் என்று பொய்யை பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்க : வைகோ வலியுறுத்தல்!