Tamilnadu
”விவசாயக் கடன் தள்ளுபடி; முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு” - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழ்நாடு அரசுக்கு எந்தெந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
அதனடிப்படையில் சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து கடன் தள்ளுபடி செய்தது சரிதான். யார் யாருக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று தெரிவித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கினால், அரசின் பொருளாதாரம் பாதிக்கும், நிதிச்சுமை ஏற்படும் என முந்தைய அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தற்போதைய திமுக அரசு, அரசின் புதிய கொள்கை முடிவுப்படி நிதி நிலைமைக்கு ஏற்ப தகுதியான அனைவருக்கும் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்துசெய்து உத்தரவிட்டது. நிலுவையில் உள்ள வழக்கையும் முடித்துவைத்து.
தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்வதில் எந்த தவறும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!