Tamilnadu
கனமழை.. இதுதான் உகந்த நேரம் - ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கஞ்சா கடத்திய கும்பல்!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.அந்த வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெரிய பார்சல் மூட்டைகள் இருந்தை பார்த்த அதிகாரிகள் சந்தேகத்துடன் ஆய்வு செய்தனர். அதில் கஞ்சா இருந்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர்.இதில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி ஈரோட்டில் விற்பனை செய்யச் சென்றபோது பிடிபட்டுக் கொண்டது தெரியவந்தது. மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்ததால் இந்த நேரத்தைப் பயன்படுத்தி கஞ்சாவை கடத்தி சென்றால் யாரிடமும் மாட்டிக் கொள்ள மாட்டோம் என நினைத்து கஞ்சாவை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் பிடிபட்ட அந்த இரண்டு நபர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!