Tamilnadu
ஒரே ஆண்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 41 பைக்குகள் அபேஸ்; பலே கும்பல் சிக்கியது எப்படி? - ஓசூரில் பரபரப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வருடமாக தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் அரங்கேறி வந்தது.
இந்த தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி உத்தரவின் பேரில் சூளகிரி காவல் ஆய்வாளர் மனேகரன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சூளகிரி பகுதியில் போலிஸார் வாகன தணிக்கையின் போது 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பரசேர்ந்த தட்சணமூர்த்தி, வாணியம்பாடியை சேர்ந்த அரசன், சந்தோஷ், சதீஷ் மற்றும் வேலூரை சேர்ந்த திருவெங்கடம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 41 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தது அவர்களை கைது செய்த சூளகிரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை மேற்க்கொண்டுவருகின்றனர்.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!