Tamilnadu
விஜய் சேதுபதிக்கு பகிரங்க மிரட்டல்... அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்த கோவை போலிஸ்!
நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூபாய் 1001 பரிசு அளிக்கப்படும் என அறிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதி, முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்தியதாகவும் அவரை உதைப்பவர்களுக்கு ரூபாய் 1001 பரிசு வழங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
நடிகர் விஜய் சேதுபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக இன்று கோவை பி1 கடைவீதி காவல்நிலையத்தில் அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, ‘ஜெய்பீம்’ படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த பா.ம.க மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?