Tamilnadu
கடன் கொடுத்தா திருப்பி கேப்பியா? உன்னால ஆனத பாத்துக்க -சுய உதவிக்குழுவினரை அடித்து விரட்டிய பாஜக நிர்வாகி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ கீரனூர் காலனி பகுதியில் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் பிரமுகரின் மனைவி தனியார் மகளிர் சுய உதவிக் குழுவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் சுமார் மூன்று மாதகாலமாக ஏமாற்றி வந்துள்ளார்.
அந்தக் கடனை கேட்கச் சென்ற தனியார் சுய உதவி குழுவில் வேலை செய்யும் ஊழியரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மருது என்பவர் ’என் மனைவியிடம் கடனைத் திரும்பத் தருமாறு கேட்பியா டா’ என்று கூறி கடனை வசூலிக்க வந்த சுய உதவி குழுவின் ஊழியரை விரட்டி விரட்டி அடித்து தாக்கியுள்ளார்.
அடித்துவிட்டு ’பணத்தை திரும்பத் தர முடியாது உன்னால் முடிந்தால் எங்க வேணாலும் போய் சொல், என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று தகாத வார்த்தையால் திட்டி விரட்டி உள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
Also Read
-
“நீட் தடையை உடைப்பதற்கான படையாக DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்” : உதயநிதி ஸ்டாலின்!
-
”NEET தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது.” : தி இந்து நாளிதழில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
“கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்” : ச.தமிழ்ச்செல்வனுக்கு முரசொலி பதிலடி!
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!