Tamilnadu
“வெள்ளத்தில் சிக்கிய 26 பசுமாடுகள் 4 மணி நேரத்தில் மீட்பு” : ‘நிஜ பசுக்காவலர்’களுக்கு குவியும் பாராட்டு!
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் நடுவே திட்டு பகுதி அதிகம் உள்ளது. இந்த பகுதிக்கு ஆற்றின் அருகே இருக்கும் சந்தைப்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர்களின் மாடுகள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேய்ச்சலுக்குச் சென்ற 26 மாடுகள் திட்டுப்பகுதியிலேயே மாட்டிக்கொண்டது.
இதை அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அச்சமடைந்து வேதனையடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார், தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் இரண்டு பைபர் படகுகளில் திட்டுப்பகுதிக்குச் சென்று ஒவ்வொரு மாடுகளாக படகில் ஏற்றி 4 மணி நேரத்தில் 26 மாடுகளையும் கரைக்கு பத்திரமாக மீட்டு வந்தனர்.
பின்னர், பசுமாடுகளை பத்திரமாக மீட்டதற்கு அதிகாரிகளுக்கும், நீச்சல் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குச் சந்தைப்படுகை கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை துரிதமாக மீட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டுகுள் குவிந்து வருகிறது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!