Tamilnadu
’கஸ்டமருங்க நானு’ ; பாண்டி பஜார் நகைக் கடையில் லாவகமாக நகையை திருடிய பலே கில்லாடி!
சென்னை பாண்டி பஜார் பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் 11 கிராம் நகை திருடு போனதாக கடையின் மேலாளர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நகை கடையின் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியபோது, கடந்த 23ஆம் தேதி பெண் ஒருவர் குழந்தைகளுக்கு நகை வாங்க வேண்டும் எனக் கூறி நகைகளை பார்த்த பின்பு 100 கிராம் தங்க செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் பெண் தொடர்பாக விசாரணை நடத்திய போது வண்டலூர் ஜிஎன்டி பகுதியை சேர்ந்த பிரியங்கா(31) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்தப் பெண் இதேபோன்று தாம்பரத்தில் மற்றொரு கடையில் திருட்டில் ஈடுபட்ட தெரியவந்துள்ளது. பெண்ணிடம் இருந்து 35 கிராம் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Also Read
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?