Tamilnadu
’கஸ்டமருங்க நானு’ ; பாண்டி பஜார் நகைக் கடையில் லாவகமாக நகையை திருடிய பலே கில்லாடி!
சென்னை பாண்டி பஜார் பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் 11 கிராம் நகை திருடு போனதாக கடையின் மேலாளர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நகை கடையின் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியபோது, கடந்த 23ஆம் தேதி பெண் ஒருவர் குழந்தைகளுக்கு நகை வாங்க வேண்டும் எனக் கூறி நகைகளை பார்த்த பின்பு 100 கிராம் தங்க செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் பெண் தொடர்பாக விசாரணை நடத்திய போது வண்டலூர் ஜிஎன்டி பகுதியை சேர்ந்த பிரியங்கா(31) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்தப் பெண் இதேபோன்று தாம்பரத்தில் மற்றொரு கடையில் திருட்டில் ஈடுபட்ட தெரியவந்துள்ளது. பெண்ணிடம் இருந்து 35 கிராம் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Also Read
-
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!