Tamilnadu
’கஸ்டமருங்க நானு’ ; பாண்டி பஜார் நகைக் கடையில் லாவகமாக நகையை திருடிய பலே கில்லாடி!
சென்னை பாண்டி பஜார் பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் 11 கிராம் நகை திருடு போனதாக கடையின் மேலாளர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நகை கடையின் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியபோது, கடந்த 23ஆம் தேதி பெண் ஒருவர் குழந்தைகளுக்கு நகை வாங்க வேண்டும் எனக் கூறி நகைகளை பார்த்த பின்பு 100 கிராம் தங்க செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் பெண் தொடர்பாக விசாரணை நடத்திய போது வண்டலூர் ஜிஎன்டி பகுதியை சேர்ந்த பிரியங்கா(31) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்தப் பெண் இதேபோன்று தாம்பரத்தில் மற்றொரு கடையில் திருட்டில் ஈடுபட்ட தெரியவந்துள்ளது. பெண்ணிடம் இருந்து 35 கிராம் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!