Tamilnadu
தீபாவளி சீட்டு மோசடி.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் : நடந்தது என்ன?
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கோவூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராமமூர்த்தி, உமா மகேஷ்வரி ஆகியோரிடம் 2013ஆம் ஆண்டு தீபாவளி சீட்டிற்குப் பணம் கட்டியுள்ளார்.
மேலும், தனது பகுதியைச் சேர்ந்த 14 பேரையும் தீபாவளி சீட்டிற்குப் பணம் கட்டும்படி கோரி அவர்களையும் இதில் சேர்த்துள்ளார். இப்படி தீபாவளி சீட்டு மூலம் தம்பதிகள் ராமமூர்த்தி, உமா மகேஷ்வரி ஆகியோர் ரூ. 65 லட்சத்து 97 ஆயிரத்து 700 வசூல் செய்துள்ளனர்.
ஆனால், இந்த தம்பதியர் அறிவித்ததைப் போல் தீபாவளிக்கு பணத்தைத் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து புருஷோத்தமன் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் ராமமூர்த்தி, உமா மகேஷ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில் தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதால், ராமமூர்த்தி, உமா மகேஷ்வரி ஆகிய இருவருக்கும் 2 வருடங்கள் சிறைத் தண்டனையும், வசூலித்த பணத்தை உரியவர்களிடம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!