Tamilnadu
3 நாட்களுக்குக் கன மழை.. தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்: எச்சரிக்கை விடுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் !
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இதனால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் எனவும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதன்படி கடலோர மாவட்டங்களான சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரை கன மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடம். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலம்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!