Tamilnadu
3 நாட்களுக்குக் கன மழை.. தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்: எச்சரிக்கை விடுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் !
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இதனால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் எனவும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதன்படி கடலோர மாவட்டங்களான சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரை கன மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடம். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலம்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?
-
அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !
-
பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !
-
நீட் தேர்வெழுத வந்தவர்களுக்கு குடிநீர் வழங்காத தேர்வு மையம்: களத்தில் உதவிய போலீஸார் - குவியும் பாராட்டு!