Tamilnadu
"தமிழ்நாட்டில் முற்போக்கு முளைவிட்டு கிளம்பியிருக்கிறது": தி.மு.க ஆட்சிக்கு நன்மாறன் புகழாரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு நூறு நாளில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.நன்மாறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்.நன்மாறன் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியா முழுவதும் பிற்போக்கு தலைவிரித்தாடும் போது, தமிழகத்தில் முற்போக்கு முளை விட்டு கிளம்பியிருக்கிறது. நூறு நாள் ஆட்சி 100/100 தமிழக வளர்ச்சிக்குழு அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. துறைவாரியாக சொல்ல முடியவில்லை. இந்த ஆட்சி மொத்தத்தில் நூற்றுக்கு நூறு!” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்.நன்மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்!: முதலமைச்சர் நெகிழ்ச்சிப் பதிவு!
-
“மனிதநேயமிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம்!
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!