Tamilnadu
"தமிழ்நாட்டில் முற்போக்கு முளைவிட்டு கிளம்பியிருக்கிறது": தி.மு.க ஆட்சிக்கு நன்மாறன் புகழாரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு நூறு நாளில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.நன்மாறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்.நன்மாறன் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியா முழுவதும் பிற்போக்கு தலைவிரித்தாடும் போது, தமிழகத்தில் முற்போக்கு முளை விட்டு கிளம்பியிருக்கிறது. நூறு நாள் ஆட்சி 100/100 தமிழக வளர்ச்சிக்குழு அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. துறைவாரியாக சொல்ல முடியவில்லை. இந்த ஆட்சி மொத்தத்தில் நூற்றுக்கு நூறு!” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்.நன்மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!