Tamilnadu
"தமிழ்நாட்டில் முற்போக்கு முளைவிட்டு கிளம்பியிருக்கிறது": தி.மு.க ஆட்சிக்கு நன்மாறன் புகழாரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு நூறு நாளில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.நன்மாறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்.நன்மாறன் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியா முழுவதும் பிற்போக்கு தலைவிரித்தாடும் போது, தமிழகத்தில் முற்போக்கு முளை விட்டு கிளம்பியிருக்கிறது. நூறு நாள் ஆட்சி 100/100 தமிழக வளர்ச்சிக்குழு அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. துறைவாரியாக சொல்ல முடியவில்லை. இந்த ஆட்சி மொத்தத்தில் நூற்றுக்கு நூறு!” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்.நன்மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!