Tamilnadu
“TV-யை எடுத்துக்கொண்டு வீதிவீதியாக சென்று பாடம் எடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்” : யார் இந்த சீனிவாசன் ?
மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குச் சீனிவாசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி இல்லாததால், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் படிப்பதில் சிரமம் இருந்துள்ளது.
இதனை அறிந்த சீனிவாசன் தனது சொந்த செலவில் ஒரு தொலைக்காட்சி வாங்கி, அதை நெம்மேலி கிராமத்திற்கு எடுத்துச் சென்று வீதி வீதியாக மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் எடுத்து வருகிறார்.
ஆசிரியர் சீனிவாசனின் இந்த கல்விச் சேவையைத் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காலத்தில் நெம்மேலி நெப்பத்தூர் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி கற்கக்கூடிய வகையில் தங்களுடைய வருமானத்தில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கி அரசு தொலைக்காட்சியான 'கல்வி' மூலம் அக்கிராம மாணவர்களுக்குக் கல்வி போதித்து வரும் உங்களது ஆசிரியர் பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. உங்களின் ஆசிரியர் பணி மேன்மேலும் சிறக்கவும் என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
-
ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!
-
“திறக்கப்படாத மேட்டூர் அணையால் வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!” : தவெக அரசுக்கு திமுக கண்டனம்!