Tamilnadu
“TV-யை எடுத்துக்கொண்டு வீதிவீதியாக சென்று பாடம் எடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்” : யார் இந்த சீனிவாசன் ?
மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குச் சீனிவாசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி இல்லாததால், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் படிப்பதில் சிரமம் இருந்துள்ளது.
இதனை அறிந்த சீனிவாசன் தனது சொந்த செலவில் ஒரு தொலைக்காட்சி வாங்கி, அதை நெம்மேலி கிராமத்திற்கு எடுத்துச் சென்று வீதி வீதியாக மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் எடுத்து வருகிறார்.
ஆசிரியர் சீனிவாசனின் இந்த கல்விச் சேவையைத் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காலத்தில் நெம்மேலி நெப்பத்தூர் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி கற்கக்கூடிய வகையில் தங்களுடைய வருமானத்தில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கி அரசு தொலைக்காட்சியான 'கல்வி' மூலம் அக்கிராம மாணவர்களுக்குக் கல்வி போதித்து வரும் உங்களது ஆசிரியர் பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. உங்களின் ஆசிரியர் பணி மேன்மேலும் சிறக்கவும் என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!