Tamilnadu
“TV-யை எடுத்துக்கொண்டு வீதிவீதியாக சென்று பாடம் எடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்” : யார் இந்த சீனிவாசன் ?
மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குச் சீனிவாசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி இல்லாததால், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் படிப்பதில் சிரமம் இருந்துள்ளது.
இதனை அறிந்த சீனிவாசன் தனது சொந்த செலவில் ஒரு தொலைக்காட்சி வாங்கி, அதை நெம்மேலி கிராமத்திற்கு எடுத்துச் சென்று வீதி வீதியாக மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் எடுத்து வருகிறார்.
ஆசிரியர் சீனிவாசனின் இந்த கல்விச் சேவையைத் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காலத்தில் நெம்மேலி நெப்பத்தூர் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி கற்கக்கூடிய வகையில் தங்களுடைய வருமானத்தில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கி அரசு தொலைக்காட்சியான 'கல்வி' மூலம் அக்கிராம மாணவர்களுக்குக் கல்வி போதித்து வரும் உங்களது ஆசிரியர் பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. உங்களின் ஆசிரியர் பணி மேன்மேலும் சிறக்கவும் என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !
-
நீட் தேர்வெழுத வந்தவர்களுக்கு குடிநீர் வழங்காத தேர்வு மையம்: களத்தில் உதவிய போலீஸார் - குவியும் பாராட்டு!
-
தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் : ஹரியானாவில் மேலும் ஒரு பெண் விவசாயி உயிரிழப்பு !
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!