Tamilnadu

சிக்கன் கிரேவி சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் தர்ஷினி. இவர்கள் இருவரும் கடந்த 12ம் தேதி உணவகம் ஒன்றில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்துள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து உணவு மற்றும் குளிர்பானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் கற்பகம் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். இதில் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் வீரப்பெருமாள் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை குடும்பத்தினரிடம் காட்டிவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த தாயும், மகளும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து போலிஸார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கன் கிரேவி சாப்பிட்டதால்தான் இருவர் உயிரிழந்தனர் என்ற நிலையில், அவர்கள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை... தூத்துக்குடியில் நடந்தது என்ன?