Tamilnadu
47 பேரை கடித்த வெறிநாய்... அடித்து கொன்ற பொதுமக்கள்: நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே தெருநாய் ஒன்று சுற்றித் திருந்து கொண்டிருந்தது. அப்போது அந்த நாய் திடீரென பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை கடித்தது.
இதனால் நாயைப் பொதுமக்கள் அடித்து விரட்டினர். பிறகு பேருந்து நிலையத்திலிருந்து தப்பி ஓடிய நாய் சாலையில் நடந்து சென்ற மக்களைக் கடித்துக் குதறியது. இப்படி ஒரு மணி நேரத்தில் மட்டும் 47 பேரை கடித்ததால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த நாயை அடித்தே கொன்றனர்.
மேலும், நாய் கடித்தத்தில் 12க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் தெருநாய்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாசியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Also Read
-
”பொய் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் : லண்டன் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
26 நிறுவனங்கள் - ரூ. 7,020 கோடி முதலீட்டு : ஜெர்மனி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !