Tamilnadu
“56 இடங்களில் 80 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை” : பிரபல ஹெல்மெட் கொள்ளையன் போலிஸிடம் சிக்கியது எப்படி?
மயிலாடுதுறை மாவட்டத்தில் சில மாதங்களாகக் கடைகளை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக போலிஸாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர், கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹெல்மெட் அணிந்த நபர்தான் அனைத்து இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை போலிஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சித்திரை விடங்கனைப் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்தது. மேலும் 2004ம் ஆண்டில் திருப்பூரில் 7 கடைகளில் கொள்ளையடித்துள்ளார்.
அதேபோல், திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 21 இடங்களில் கொள்ளையடித்துள்ளார். சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், பெரம்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 56 இடங்களில் தனது கைவரிசை காட்டியுள்ளார்.
இந்த அனைத்து இடங்களிலும் இரு சக்கர வாகனத்தில் வந்து ஹெல்மெட் அணிந்து கொண்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். லட்சுமணன் பார்ப்பதற்கு போலிஸார் போல் இருப்பதால் பொதுமக்கள் யாருக்கும் இவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை.
இந்நிலையில்தான் மயிலாடுதுறையில் மூன்று இடங்களில் கொள்ளை அடித்துவிட்டு நான்காவதாகக் கொள்ளையில் ஈடுபட்ட போது லட்சுமணன் போலிஸாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இவர் மீது உள்ள வழுக்களை போலிஸார் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!